நவரா அரிசி "எல்லா
நோய்களையும் குணப்படுத்தும் தாய்"
இளமையாக வாழ நவரா ஒன்று மட்டுமே போதும்
கேரளா
மக்களின் முக்கிய உணவான "நவரா அரிசி". பல்வேறு வகையான மருத்துவ பலன்கள்
கொண்டுள்ள அரிசி வகையாகும். ஆயுர்வேத மருத்துவ முறையில் இவ்வகை அரிசியை மூலிகை
அரிசி என அறியப்படுகிறது.
இந்தியாவில் காணப்படும் பல வகை அரிசிகளில் நவார அரிசியும் ஒன்று. இது
ஒரைசா குடும்பத்தை சேர்ந்த தானிய வகை. கேரளா, இதன் தோற்றம். 2007 - 2009 ல் இதற்கு புவியியல்
குறியீடு வழங்கப்பட்டது. பொதுவாக இந்த குறியீடு தரத்திற்காகவும் மற்றும் கிடைக்கும் புவியியல் பகுதி களுக்காகவும் வழங்கப்படுகிறது)
தனி சிறப்புகள்:
கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய்யாளிகள், தோல் வியாதி குறைபாடு போன்றவைக்கு ஏற்ற உணவாகும்.
நவரா ரக அரிசி, சிறுபிள்ளைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும்
சளியைப் போக்கக்கூடியது. இந்த அரிசிக் கஞ்சி அல்லது சாதத்தை உணவாக எடுத்து வந்தால், சளி முழுமையாகக் குணமடையும்.
உணவே மருந்து என்பது பழமொழி.
நாம் உண்ணும் உணவில் தான் நமது உடலின் ஆரோக்கியமே
இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை
வைத்திருந்தனர். ஆனால் இன்றோ உணவே விஷமாகி விட்ட சூழல் நிலவுகிறது. இந்த சூழலிலும்
மலையாளிகள் ஒரு மூலிகை அரிசியை விரும்பி சாப்பிடுகின்றனர்.
பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியின் பெயர் ‘நவார அரிசி’ இது கேரளாவில் அதிகம் விளையக்
கூடியது. இதன் பூர்வீகமும் கேரளம் தான். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
இந்த அரிசியை சாப்பிடலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த நவார அரிசி முக்கியப்பங்கு
வகிக்கிறது. இந்த அரிசியில் மூலிகைத்தன்மை இருப்பதால் உடலுக்கு உறுதியைக்
கொடுக்கும். நோய் நொடி இன்றி நீண்ட கால வாழ்வுக்கு அடித்தளம் இடும். ரத்தச்
சுத்திகரிப்பு,
உடலில் நச்சுக்களை வெளியேற்றல்
ஆகியவற்றுக்கும் இந்த அரிசி முக்கியப்பங்கு வகிக்கிறது.
நவார அரிசி பயன்கள்
- பால்
மற்றும் மூலிகைகள் மூலம் சமைக்கக், உள்
காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- நவரா
அரிசியின் தவிடு மூலமாக எடுக்கப்படும் எண்ணெய் பரவலான வலிகள் மற்றும்
கர்ப்பப்பை வாய் ஸ்போண்டிலோசிஸ், குறைந்த
முதுகுவலி, பக்கவாதம் மற்றும்
முடக்கு வாதம் போன்ற வலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
- தோல்
சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் நவரா அரிசி பேஸ்ட், லெபனாம்(lepanam) மாக
பயன்படுத்துகின்றனர். இந்த பேஸ்ட் தோல் புண்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
- நவரா
அரிசி உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கு
பாதுகாப்பான உணவாகவும் கருதப்படுகிறது.
- நரம்பு
தசைக் கோளாறுகளை குணப்படுத்தப் கேரள பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு
சிகிச்சையான (Navarakizhi)
பயன்படுத்தப்படுக்கிறது.
- மூட்டுகளின் விறைப்பை நீக்குகிறது, உடற்கழிவுகளை சுத்தம் செய்கிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. மேலும் உடற்ச்சோர்வு போக்க வல்லது
ஆயுர்வேத
அரிசி
இந்த அரிசியில் மூலிகை தன்மை
நிறைந்து உள்ளதால் இதை சாப்பிடுவோருக்கு உடல் திடம் பெறும். நோய் நொடிகள் இல்லாமல்
நீண்ட காலம் வாழ இந்த நவார அரிசியை சமையலில் பயன்படுத்தினாலே போதும். இரத்தத்தை
சுத்திகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும்
இந்த அரிசி பயன்படுகிறது.
எதிர்ப்பு
சக்தி
இப்போதெல்லாம் நோய்களின்
வருகை அதிகமாகி கொண்டே போகிறது. இது ஒரு புறம் இருக்க இதன் தாக்குதல் அதிக வீரியம்
கொண்டதாக உள்ளது. நோய்களை தடுக்க எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலே போதும். நவார
அரிசி சாப்பிட்டு வந்தால் வெள்ளை அணுக்கள் உயர்ந்து எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்.
கர்ப்பிணிகளுக்கு
இந்த அரிசியை கர்ப்பிணிகள்
சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள சிசு மிக ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகள் இந்த
அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக இளம் வயதிலே குழந்தைகள் புத்திசாலியாக
இருப்பார்கள். அத்துடன் சுறுசுறுப்பும் கூடும்.
சர்க்கரை
நோயாளிகள்
அதிக சத்துக்களும், தாதுக்களும் நவார அரிசியில் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ள உதவும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக சாப்பிடலாம். மேலும், உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் இந்த அரிசி உதவுகிறது.
எவ்வாறு சாப்பிடலாம்?
இந்த அரிசியை அப்படியே வேக வைத்து பால் சேர்த்து
சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி கூழ் பதத்தில் பாலுடன் கலந்து சாப்பிடலாம். நாம்
சாப்பிட கூடிய மற்ற அரிசி வகைகளை காட்டிலும் இதில் அற்புதமான மூலிகை வாசம்
சாப்பிடும் போது ஏற்படும்.
மூட்டு பிரச்சினைகள்
இந்த அரிசியில் உள்ள மூலிகை தன்மை மூட்டுகளை
இலகுவாக்கி இறுக்கமான தன்மையை போக்கி விடும். இதனால் மூட்டு சார்ந்த வலிகள், வீக்கங்கள், போன்றவை இனி இருக்காது. மொத்தத்தில்,
உடலின் செல்களை புத்துணர்வுடன் வைத்து நீண்ட ஆயுளை தர இந்த நவார
அரசி உதவுகிறது.
1. நவார அரிசியில் நார்ச்சத்து அதிகம். இதனால் இந்த அரிசி
சீக்கிரம் செரிமானம் அடையும். இதற்கு மலச்சிக்கல், வயிற்று
உப்புசத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.
2. இந்த அரிசி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்தஅரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் கணிசமாய் உயரும். இதுதான் நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். போர் வீரர்கள். குழந்தைகள் சுறுசுறுப்புடன் இயங்கவும், புத்திசாலியாக வளரவும் இந்த அரிசி அடித்தளமிடும்.
3. கரு ஆரோக்கியமாக
வளரும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை அதிகம்
சாப்பிடலாம். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள்
கொண்டுவரவும் இந்த அரிசி உதவும். சோம்பலை போக்கி சுறுசுறுப்பையும் இந்த அரிசி தரவல்லது.
RECIPES
- நவரா
அரிசிப் பயன்படுத்தி, பின்வரும் சமையல் வகைகளை
செய்யலாம்:
- நவரா
நெய் பயாசம்
- நவரா
இனிப்புகள்
- நவரா தேங்காய் பால்
பயாசம்
காலை
உணவு
நவரா
அரிசி சுடுகஞ்சி..
(மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு தட்டிப்போட்டு கருவேப்பிலை
கொத்தமல்லி சேர்த்தது)
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உளுந்து கடலைபருப்பு உப்பு சேர்த்து எண்ணெயில் வதக்கி, இணை உணவு தொட்டு சாப்பிட..இந்த அரிசியை கஞ்சியாக்கிச் சாப்பிட்டால், குளிர்காலங்களில் வரக்கூடிய சளி, இருமல் ,காய்ச்சல் வராது. கருங்குறுவை அரிசியைப் போன்று அதிக ஊட்டச்சத்துக்களையுடையது.
1. அரிசியை அப்படியே வேகவைத்து பால் சேர்த்து சாப்பிடலாம்.
2. அரிசியை பொடியாக்கி கூழ் போன்று பால் சேர்த்தும் சாப்பிடலாம்.
3.மூட்டு வலி, கால்
வீக்கத்தையும் குணப்படுத்தும்
ஆற்றல் இந்த அரிசிக்கு
உண்டு.






0 Comments